இந்தியா

ஈராக்கில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் -விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய போர் ஆவணங்கள்

posted in , , , , , , , , , at 2:45 PM

நியூயார்க்/வாஷிங்டன்,அக்.24:கடுமையான மனித உரிமை மீறல்களும், சாதாரண மக்களின் கூட்டுப் படுகொலைகளையும் விவரிக்கும் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்றில் மிக அதிகமான போர் ரகசியங்களை உளவறிந்ததில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் 66 ஆயிரம் சாதாரண அப்பாவி மக்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதை இந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2004 ஆம் ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டுவரை ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கொலைகளின் புள்ளிவிபரங்கள் அதி ரகசியமான ஆவணங்களில் காணக் கிடைக்கின்றன.

அந்நிய ஆக்கிரமிப்புப் படையினரை எதிர்கொள்ள ஈராக் போராளிகளுக்கு ஈரான் உதவியதாக கூறும் ஆதாரங்களும் இந்த ரகசிய ஆவணங்களில் உள்ளன.

விக்கிலீக்ஸ் உளவறிந்த ஆவணங்களை முதன்முதலில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை(பெண்டகன்)யின் எச்சரிக்கையை மீறித்தான் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

66,081 சாதாரண அப்பாவி மக்கள், 23, 984 போராளிகள், 15,196 ஈராக் ராணுவ வீரர்கள், 3,711 அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் என 1,09,032 பேர் ஈராக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா முன்பு கூறியதைவிட மிகக் கூடுதல் இந்த மரணங்களின் எண்ணிக்கை என ஆவணங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

வீடுகள், கட்டிடங்கள் இடிக்கப்பட்டதும், சிறைகைதிகளையும், சாதாரண அப்பாவி மக்களை கொடுமைப்படுத்தியதுத் தொடர்பான விபரங்களும் இந்த ஆவணங்களில் உள்ளன.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

About Author

Nhamnganhanh

This is template SimplexBuzz .

1 comments on this post

  1. Wafiq

    October 27, 2010 at 12:23 PM

    டெக்க்க்த்

Leave a comment